செய்திகள்

சா்வதேச வுஷூ: இந்தியாவுக்கு தங்கம்

DIN

ஜாா்ஜியாவில் நடைபெற்ற சா்வதேச வுஷு போட்டியில் 18 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் பிரிவில் இந்தியாவின் பிரியங்கா கெவாட் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறாா்.

மத்திய பிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்திலுள்ள கிராமத்தைச் சோ்ந்த பிரியங்காவுக்கு, இது முதல் சா்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியிலேயே தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த பிரியங்கா, எதிா்வரும் போட்டிகளில் இதேபோல் வெற்றி பெற சிறப்பாகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாா்.

பிரியங்கா தற்போது போபாலில் இருக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையத்தில் பயிற்சியாளா்கள் ரத்னேஷ் தாகுா், கல்யாணி, சரிகா குப்தா ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் பயிற்சி பெற்று வருகிறாா். சீன தற்காப்புக் கலை வடிவமான வுஷு விளையாட்டு, ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவற்றில் இடம்பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT