பாகிஸ்தான் ரசிகர்களின் அன்பு கட்டளையை ஏற்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபையில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் அன்பு கட்டளையாக செல்பி புகைப்படம் கேட்டனர்.
உங்களுக்காவே பாகிஸ்தானிலிருந்து வந்திருக்கிறேன் என்ற ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் கைக்கொடுத்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார் ரோகித்.
இந்தியா பாகிஸ்தானுடன் ஆக.28ஆம் தேதி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.