செய்திகள்

குகேஷைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் நெ.2 செஸ் வீரராக முன்னேறிய அர்ஜுன்

DIN

துபை ஓபன் செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் அர்ஜுன் எரிகைசி, இந்தியாவின் நெ.2 செஸ் வீரராக முன்னேறியுள்ளார்.

அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் போட்டியை இந்தியாவின் 18 வயது அர்ஜூன் எரிகைசி சமீபத்தில் வென்றார்.  9 சுற்றுகளின் முடிவில் 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். 

இந்த வெற்றியின் மூலம் செஸ் தரவரிசையில் 2724 புள்ளிகளுடன் 24-ம் இடத்துக்கு முன்னேறினார் அர்ஜுன். இவருக்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் 2756 புள்ளிகளுடன் 12-ம் இடத்திலும் குகேஷ் 2728 புள்ளிகளுடன் 20-ம் இடத்திலும் இருந்தார்கள். 

அபுதாபி ஓபன் செஸ் போட்டிக்கு அடுத்ததாக துபை ஓபன் செஸ் போட்டியில் விளையாடி வரும் அர்ஜுன் எரிகைசி, முதல் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பிரக்ஞானந்தா உள்பட 7 வீரர்களுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார். இதையடுத்து தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார். 

தற்போதைய செஸ் தரவரிசையில் முதல் இடத்தில் கார்ல்சன் தொடர்ந்து நீடிக்கிறார். விஸ்வநாதன் ஆனந்த் 12-ம் இடத்தில் உள்ள நிலையில் குகேஷைப் பின்னுக்குத் தள்ளி  2728.7 புள்ளிகளுடன் 20-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் அர்ஜுன் எரிகைசி. 2725.7 புள்ளிகளுடன் குகேஷ் 24-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் நெ.2 செஸ் வீரராக முன்னேறியுள்ளார் அர்ஜுன் எரிகைசி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

SCROLL FOR NEXT