கால்பந்து தோல்வி: நெய்மரை சமாதானம் செய்த குரோஷியா அணி வீரரின் மகன் 
செய்திகள்

கால்பந்து தோல்வி: நெய்மரை சமாதானம் செய்த குரோஷியா வீரரின் மகன்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியாவிடம் தோல்வியடைந்த பிரேஸில் அணியின் வீரர் நெய்மரை குரோஷியா அணி வீரரின் மகன் சமாதானம் செய்தார். 

DIN

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியாவிடம் தோல்வியடைந்த பிரேஸில் அணியின் வீரர் நெய்மரை குரோஷியா அணி வீரரின் மகன் சமாதானம் செய்தார். 

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியாவும், பிரேஸில் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட நேரம் (90’) கோலின்றி முடிய, கூடுதல் நேரம் (30’) 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட்டில் குரோஷியா 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்த ஆட்டத்தில் குரோஷியாவிற்கு எதிராக நெய்மர் அடித்த கோல் அவரது 7ஆவது கோலாகும். இதன்மூலம் பிரேஸிலுக்காக அதிக கோல்கள் அடித்த முன்னாள் நட்சத்திரம் பீலேவின் சாதனையை நெய்மர் சமன் செய்தார். 

எனினும் பிரேஸில் அணி காலிறுதியில் வெற்றி பெறாததால் நெய்மர் மைதானத்திலேயே உடைந்து அழுதார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்தவொரு பிரதமரும் இப்படி செய்யமாட்டார்! - ராகுல் காந்தி கடும் விமர்சனம்

200 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும்: நயினார் நாகேந்திரன் பேட்டி!

மக்கள்தொகை கூடுவது சுமை அல்ல, சொத்து! ராகுல் காந்தி

இந்தியாவை விற்றதில் வெட்கமாக இல்லையா? மக்களவையில் ராகுல் காந்தி

மகாநதி தொடரில் திடீர் திருப்பம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT