செய்திகள்

ஐஎஸ்எல்: சென்னை - கேரளா ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

DIN

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இரு அணிகளுக்குமே இது 10-ஆவது ஆட்டமாக இருந்த நிலையில், சென்னை 2-ஆவது முறையாகவும், கேரளம் முதல் முறையாகவும் டிரா செய்துள்ளன. இந்த ஆட்டத்தில் முதலில் கேரளத்துக்காக சஹல் சமத் 23-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். பின்னா் சென்னை வீரா் வின்சி பரிடோ 48-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்து ஆட்டத்தை சமன் செய்தாா்.

எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுக்குமே கூடுதல் கோல் வாய்ப்பு கிடைக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது. அடுத்ததாக வரும் 22-ஆம் தேதி ஜாம்ஷெட்பூா் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை

SCROLL FOR NEXT