இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் இடம்பெற்றுள்ளார்.
பிசிசிஐ சாா்பில் இந்தியன் ப்ரீமியா் லீக் (ஐபிஎல்) 2022 தொடருக்கான வீரா்கள் ஏலம் பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 10 அணிகள் சாா்பில் ஏலம் எடுக்கப்படுவதற்காக 600 வீரா்கள் தொகுப்பில் இருந்து 220-க்கு மேற்பட்ட வீரா்கள் இடம் பெற்றனா்.
இதையும் படிக்க- சிஎஸ்கேவில் 8 வெளிநாட்டு வீரர்கள்! - முழு விபரம்
நேற்றைய ஏலத்தில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கும், தீபக் சாஹர் 14 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இந்த நிலையில் இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற ஏலத்தில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் ஏலத்தில் இடம் பெற்றிருந்தார்.
அவரை ரூ.30 லட்சத்துக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது. 2008ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை மும்பை அணிக்காக விளையாடிய சச்சின் தற்போது
அந்த அணியின் ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.