செய்திகள்

இந்தியா ஓபன் பாட்மிண்டன்: ஸ்ரீகாந்த் உள்பட ஏழு வீரர்களுக்கு கரோனா

இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் விளையாடும் ஸ்ரீகாந்த் உள்பட ஏழு வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

DIN

இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் விளையாடும் ஸ்ரீகாந்த் உள்பட ஏழு வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தில்லியில் இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டுள்ள ஏழு வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஸ்ரீகாந்த் உள்பட ஏழு வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கரோனாவாலிருந்து குணமான பிறகே ஏழு பேரும் தில்லியை விட்டு வெளியேற முடியும்.

ஏழு வீரர்களுக்கும் செவ்வாய் அன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் இன்று காலையில் வெளியானது. ஏழு பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் விளையாடும் ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார்கள். இரட்டையர் போட்டியில் இவர்களுடன் விளையாடிய வீரர்களும் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

SCROLL FOR NEXT