செய்திகள்

இந்தியா ஓபன் பாட்மிண்டன்: ஸ்ரீகாந்த் உள்பட ஏழு வீரர்களுக்கு கரோனா

DIN

இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் விளையாடும் ஸ்ரீகாந்த் உள்பட ஏழு வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தில்லியில் இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டுள்ள ஏழு வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஸ்ரீகாந்த் உள்பட ஏழு வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கரோனாவாலிருந்து குணமான பிறகே ஏழு பேரும் தில்லியை விட்டு வெளியேற முடியும்.

ஏழு வீரர்களுக்கும் செவ்வாய் அன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் இன்று காலையில் வெளியானது. ஏழு பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் விளையாடும் ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார்கள். இரட்டையர் போட்டியில் இவர்களுடன் விளையாடிய வீரர்களும் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு

புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

SCROLL FOR NEXT