இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா விடுவிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா விடுவிக்கப்படுவதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | தொடக்க வீரராகக் களமிறங்குகிறேன்: கே.எல். ராகுல் அறிவிப்பு
அதிக பணிச்சுமை காரணமாக அவர் அணியிலிருந்து விடுவிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள கிரிக்கெட் வாரியம் அவருக்குப் பதில் மாற்று வீரர் யாரும் சேர்க்கப்படவில்லை என்றும் அறிவித்துள்ளது.
இருஅணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் நாளை போலண்ட் பார்க்கில் நடைபெறுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்குத் தொடங்குகிறது.