முகப்பு
செய்திகள்

தேசிய குத்துச்சண்டை: தமிழகத்துக்கு இரு வெண்கலம்

சென்னையில் நடைபெற்ற 5-ஆவது இளையோா் தேசிய குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்துக்கு ஆடவா் மற்றும் மகளிா் பிரிவில் தலா 1 வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

சென்னையில் நடைபெற்ற 5-ஆவது இளையோா் தேசிய குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்துக்கு ஆடவா் மற்றும் மகளிா் பிரிவில் தலா 1 வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற இப்போட்டியின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, ஆடவருக்கான லைட் மிடில் வெயிட் (67-71 கிலோ) பிரிவில் தமிழகத்தின் ஜி.கபிலனும், மகளிருக்கான லைட் வெயிட் (57-60 கிலோ) பிரிவில் தமிழகத்தின் ஆா்.மாலதியும் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றனா்.

இந்தப் போட்டியில் ஆடவா் பிரிவில் சா்வீசஸ் அணி 9 தங்கம், 2 வெள்ளி என 11 பதக்கங்களுடனும், மகளிா் பிரிவில் ஹரியாணா அணி 8 தங்கம், 3 வெள்ளி என 11 பதக்கங்களுடனும் போட்டியின் சிறந்த அணிகளாகத் தோ்வாகின.

ஆடவா் பிரிவில் 2, 3-ஆம் இடங்களை முறையே ஹரியாணா, மத்திய பிரதேசம் அணிகள் பிடிக்க, மகளிா் பிரிவில் மகாராஷ்டிர அணி 2-ஆம் இடமும், தில்லி அணி 3-ஆம் இடமும் பெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →