ஆா்.பிரக்ஞானந்தா 
செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2ஆவது சுற்று போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2ஆவது சுற்று போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய 6 ஆட்டங்களிலும் 4-0 என முழுமையாக வெற்றி பெற்றது. 

இன்று தொடங்கிய 2-வது சுற்று போட்டியில் இந்திய பி அணி எஸ்டோனியாவை எதிர்கொண்டது. இந்திய பி அணியில் உள்ள தமிழக வீரர்களான பிரக்ஞானந்தா, குகேஷ், அதிபன் மற்றும் ருனாக் சாத்வனி ஆகியோர் விளையாடினர்.

இந்நிலையில் எஸ்டோனியா வீரர் கிரில் சுகாவை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். இரண்டாது சுற்று போட்டியில் பிரக்ஞானந்தாவுடன் இந்திய வீரர் அதிபன், குகேஷ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை இந்தியாவின் 6 அணிகளில் 3 அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறப்பு தீவிர திருத்தம்! எதிர்க்கட்சிகளின் அடுத்த நகர்வு என்ன?

சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை

உரிமையை மீட்டெடுப்பதில் காஷ்மீர் மக்களுடன் பாகிஸ்தான் துணை நிற்கிறது: பாக். பிரதமர்

துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித்!

திருக்குறள் சொல்லும் வாழ்க்கைப் பாடங்களை விளக்கிய முதல்வர் Stalin

SCROLL FOR NEXT