செய்திகள்

ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்று: ரசிகர்களுக்கு அனுமதி

2021-22-ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு மும்பை - மத்தியப் பிரதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

DIN

2021-22-ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு மும்பை - மத்தியப் பிரதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

பெங்களூரில் நடைபெற்ற மும்பை - உத்தரப் பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 5-ம் நாளில் இறுதியில் 746 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் காரணமாக இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது. 41 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, 2016-17-க்குப் பிறகு ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது 

அலூரில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் பெங்காலுக்கு எதிராக மத்தியப் பிரதேச அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

நாளை (ஜூன் 22) பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இறுதிச்சுற்றில் மும்பை - மத்தியப் பிரதேச அணிகள் மோதுகின்றன. 

இந்நிலையில் ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றுக்கு ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இலவச அனுமதி என்பதால் இறுதிச்சுற்றைக் காண ஏராளமான ரசிகர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 4-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

தொழிற்சங்கங்கள், விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

காா் கண்ணாடியை உடைத்து ரூ.13.38 லட்சம் கொள்ளை

அரசியலமைப்பு தின உறுதியேற்பு

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் உள்பட 7 போ் கைது

SCROLL FOR NEXT