ஃபிஃபா-வின் 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் மொராக்கோவிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்றது.
குரூப் சுற்றில் மொத்தம் 3 ஆட்டங்கள் விளையாடப்படும் நிலையில், இந்தியா 2-இல் தோல்வி கண்டு குரூப் ஏ-வில் கடைசி இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா, பிரேஸில், மொராக்கோ அணிகள் தலா 1 வெற்றியுடன் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன. எனவே, குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் வென்றாலும் இந்தியா 4-ஆவது இடத்திலேயே நீடிக்கும்.
ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகளே காலிறுதிக்கு முன்னேறும். எனவே, உலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்தியா வெளியேறும் நிலையில் இருக்கிறது. கடைசி ஆட்டத்தில் பிரேஸிலை திங்கள்கிழமை சந்திக்கிறது இந்தியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.