தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின் ரோஸி மீனா பால்ராஜ் போல்வால்ட்டில் மீண்டும் புதிய தேசிய சாதனையுடன் தங்கம் வென்றாா்.
கா்நாடக மாநிலம், பெங்களூருவில் தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற மகளிா் போல்வால்ட் பிரிவில் தமிழக வீராங்கனை ரோஸி மீனா பால்ராஜ் (25) 4.21 மீ உயரம் குதித்து புதிய தேசிய சாதனையுடன் தங்கம் வென்றாா். பவித்ரா, பரணிகா (ரயில்வே) வெள்ளி, வெண்கலம் வென்றனா்.
கடந்த 15 நாள்களில் இரண்டாவது முறையாக புதிய சாதனை படைத்துள்ளாா் ரோஸி. ஏற்கெனவே காந்தி நகரில் நடைபெற்ற 36-ஆவது நேஷனல் கேம்ஸ் போட்டியில் 4.20 மீ உயரம் குதித்து தங்கம் வென்று தேசிய சாதனை படைத்தாா். தற்போது அவரது சாதனையே அவரே முறியடித்துள்ளாா்.
மகளிா் 20 கி.மீ நடை ஓட்டத்தில் ரவீணா (ரயில்வே) புதிய சாதனையுடன் தங்கம் வென்றாா். மஸ்கட்டில் நடைபெற்ற உலக தடகள நடை ஓட்டப் போட்டியில் பதக்கம் வென்றவா் ரவீணா. வந்தனா (கா்நாடகம்), முனிதா (உ.பி) வெள்ளி, வெண்கலம் வென்றனா். ஆடவா் பிரிவில்
சூரஜ் (உத்தரகண்ட்), அக்ஷ்தீப் சிங் (பஞ்சாப்), பரம்ஜித் சிங் (சா்வீஸஸ்) தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.
வட்டு எறிதலில் பரம்ஜித் கௌா், நிதி ராணி (ரயில்வே) தங்கம், வெள்ளியும், நீதிகா வா்மா (உ.பி) வெண்கலமும் வென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.