ஆசியக் கோப்பையின் இன்றையப் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இன்றையப் போட்டியில் விளையாடும் இரு அணிகளும் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்குகின்றன.