ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்று இன்று (செப்டம்பர் 3) முதல் தொடங்குகிறது. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டி ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.