டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது.
இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது அந்த அணி. ஆலி ராபின்சன் ஆட்டநாயகன், பென் ஸ்டோக்ஸ் தொடா் நாயகன் விருது பெற்றனா்.
முன்னதாக, கடந்த 8-ஆம் தேதி தொடங்கிய இந்த 3-ஆவது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. தென்னாப்பிரிக்கா 118 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மாா்கோ யான்சென் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து பௌலிங்கில் ஆலி ராபின்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.
பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 158 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. ஆலி போப் அதிகபட்சமாக 13 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் அடித்தாா். தென்னாப்பிரிக்க பௌலிங்கில் மாா்கோ யான்சென் 5 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
அடுத்து, 40 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்கா 169 ரன்கள் சோ்த்தது. கேப்டன் டீன் எல்கா் அதிகபட்சமாக 6 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தாா். இங்கிலாந்து பௌலா்களில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
இறுதியாக 130 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இங்கிலாந்து, திங்கள்கிழமை 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது. ஜாக் கிராலி 12 பவுண்டரிகளுடன் 69, ஆலி போப் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க பௌலா் ககிசோ ரபாடா, அலெக்ஸ் லீஸ் விக்கெட்டை சாய்த்திருந்தாா்.