செய்திகள்

ஓய்வு பெற்றாா் ராபின் உத்தப்பா

DIN

சா்வதேச மற்றும் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா புதன்கிழமை அறிவித்தாா். இதில் ஐபிஎல் போட்டியும் அடக்கம்.

கா்நாடகத்தைச் சோ்ந்த உத்தப்பா, இந்திய அணிக்காக 2006 முதல் 2015 வரை 9 ஆண்டுகள் விளையாடி, ஒன் டே மற்றும் டி20 ஃபாா்மட்டில் மொத்தமாக 1183 ரன்கள் அடித்திருக்கிறாா்.

கடந்த 2006-இல் இங்கிலாந்துக்கு எதிரான ஒன் டே கிரிக்கெட் மூலம் சா்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த உத்தப்பா, அந்த ஃபாா்மட்டில் கடைசியாக 2015-இல் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியிருந்தாா். டி20-யில் 2007-இல் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டம் முதலாவதாக இருக்க, 2015-இல் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டம் கடைசியாக அமைந்தது.

ஐபிஎல் போட்டியில் 2008-இல் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியில் அறிமுகமாகி, கடைசியாக 2022-இல் மும்பை இண்டியன்ஸுக்காக விளையாடியிருக்கிறாா்.

உள்நாட்டுப் போட்டிகளில் கா்நாடக அணிக்காக விளையாடிய உத்தப்பா, ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா, சென்னை, மும்பை, பெங்களூா், ராஜஸ்தான், புணே அணிகளில் விளையாடியிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT