முகப்பு
செய்திகள்

ஐசிசி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய டிஸ்னி ஸ்டார்!

2024-2027 வரை ஐசிசி சார்பில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமத்தை டிஸ்னி ஸ்டார் கைப்பற்றியுள்ளது.

Updated On : 28 ஆகஸ்ட் 2022, 3:46 pm IST
பகிர்:

2024-2027 வரை ஐசிசி சார்பில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமத்தை டிஸ்னி ஸ்டார் கைப்பற்றியுள்ளது.

2024-2027 வரை ஐசிசி சார்பில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமத்தை ஏற்கனவே டிஸ்னி பெற்றிருந்தது. அடிப்படை கட்டணமாக 11,500 கோடியை ஐசிசி நிர்ணயித்த நிலையில், இருமடங்கு அதிக தொகை கொடுத்து சுமார் 24,000 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது டிஸ்னி ஸ்டார். 

"ஐசிசியுடன் மீண்டும் இணைந்து பயணிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. டிஸ்னி ஸ்டார் கடந்த ஏழு ஆண்டுகளாக ஐசிசி போட்டிகளை இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டுக் காட்சிகளில் ஒன்றாக மாற்றுவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது, மேலும் "புவியியல் மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் சொத்துக்களின் பார்வையாளர் தளத்தை விரிவுபடுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

கிரிக்கெட்டுடன், நாங்கள் புரோ கபடி லீக், இந்தியன் சூப்பர் லீக் மற்றும் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச உரிமைகளையும் வழங்குகிறோம்.

டிஸ்னி பெண்கள் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிற கிர்க்கெட்டுக்கு ஒளிபரப்பு உரிமம் கிடைப்பதில் கடுமையான போட்டி இருந்தது" என டிஸ்னி ஸ்டார் அதிபர் கே. மாதவன் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments