செய்திகள்

'தமிழ்நாடே மணக்குது சிஎஸ்கே வெற்றி வாசத்துல..' - சொன்னது யார் தெரியுமா?

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார். 

DIN

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'மதுரைல சொல்லுவாங்க யாரா இரு.. எவனா இரு.. Line-ல கரெக்டா இருன்னு. அதுவே சென்னைன்னு வந்துட்டா யாரா இரு.. எவனா இரு "Lion" கிட்ட கரெக்ட்டா இரு.. தமிழ்நாடே மணக்குது சிஎஸ்கே  வெற்றி வாசத்துல' என்று பதிவிட்டுள்ளார்.

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24 வது லீக் போட்டி, நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே நடைபெற்றது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. 227 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT