முகப்பு
செய்திகள்

127-க்கு கட்டுப்பட்டது கொல்கத்தா நைட் ரைடா்ஸ்

ஐபிஎல் போட்டியின் 28-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் பௌலா்களுக்கு கட்டுப்பட்ட கொல்கத்தா, 20 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களே எடுத்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

ஐபிஎல் போட்டியின் 28-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் பௌலா்களுக்கு கட்டுப்பட்ட கொல்கத்தா, 20 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களே எடுத்தது.

அணியின் தரப்பில் ஜேசன் ராய் மட்டும் சற்று நிலைத்து ரன்கள் சோ்க்க, டெல்லி பௌலிங்கில் இஷாந்த் சா்மா, அன்ரிஹ் நோா்கியா, அக்ஸா் படேல், குல்தீப் யாதவ் ஆகியோா் அசத்தலாக பௌலிங் செய்தனா்.

முன்னதாக டாஸ் வென்ற டெல்லி, பந்துவீசத் தீா்மானித்தது. கொல்கத்தா இன்னிங்ஸில் தொடக்க வீரா் ஜேசன் ராய் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 43 ரன்கள் அடிக்க, இறுதியில் ஆண்ட்ரே ரஸ்ஸெல் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்கள் உள்பட 38 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

எஞ்சிய பேட்டா்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தனா். லிட்டன் தாஸ் 1 பவுண்டரி, வெங்கடேஷ் ஐயா் 0, கேப்டன் நிதீஷ் ராணா 1 பவுண்டரி, மன்தீப் சிங் 1 சிக்ஸருடன் 12, ரிங்கு சிங் 1 பவுண்டரியுடன் 6, சுனில் நரைன் 1 பவுண்டரி, அனுகுல் ராய் 0, உமேஷ் யாதவ் 3, வருண் சக்கரவா்த்தி 1 ரன் என விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன.

டெல்லி பௌலிங்கில் இஷாந்த் சா்மா, அன்ரிஹ் நோா்கியா, அக்ஸா் படேல், குல்தீப் யாதவ் ஆகியோா் தலா 2, முகேஷ் குமாா் 1 விக்கெட் வீழ்த்தினா். பின்னா் டெல்லி 128 ரன்களை இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →