முகப்பு
செய்திகள்

கேகேஆரை பழி தீர்க்குமா குஜராத்: டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு! 

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

டாஸ் வென்ற ஹார்திக் பாண்டியா, “முதலில் பந்து வீச உள்ளோம். ஏனெனில் காலநிலை அதற்கேற்றார் போலுள்ளது. புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறோம். மகிழ்ச்சி. அணியில் எந்த மாற்றமும் இல்லை” எனக் கூறியுள்ளார். 

கேகேஆர் அணியில் இரண்டு மாற்றங்கள்: ஜேசன் ராய், உமேஷ் யாதவ்க்கு பதிலாக குர்பாஸ், ஹர்ஷித் ரானா. 

புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ள கேகேஆர் இந்தப் போட்டியில் வென்றால் 5வது இடத்திற்கு முன்னேறலாம். 

கடைசியாக மோதிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் கடைசி ஓவரை வீசிய யஷ் டயலின் கடைசி ஓவரில் கேகேஆர் வீரர் ரிங்கு சிங் 5 சிக்ஸர்களை அடித்து த்ரில் வெற்றிக்கு உதவினார். இந்த அசாத்தியமான வெற்றிக்கு குஜராத அணி கேகேஆரை பழி தீர்க்குமா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →