செய்திகள்

உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பு: மிதாலி ராஜ்

உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் இந்த முறை இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்பிருப்பதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

DIN

உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் இந்த முறை இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்பிருப்பதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இந்திய அணி 1983 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றிருந்தது. உலகக் கோப்பை தொடர் இந்த முறை இந்தியாவில் நடத்தப்படுவதால் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் இந்த முறை இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்பிருப்பதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: இந்திய அணியின் ரசிகை என்ற வகையில் இந்தியா இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். இது மிகப் பெரிய வாய்ப்பு. உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் இந்திய அணிக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்திய அணி சிறப்பாக செயல்பட்டால், உலகக் கோப்பையை மீண்டும் ஒரு முறை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருத்துவ சாதனங்கள் மருந்தகத்துறை, உற்பத்தியில் முதலீடு: இந்திய நிறுவனங்களுக்கு இலங்கை அமைச்சா் அழைப்பு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

பெண்களிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு: கா்நாடகத்தைச் சோ்ந்த இருவா் கைது

மகளை கடத்தி கட்டாயத் திருமணம்: தாய், ஆண் நண்பா் கைது

மின் விளக்கு எரியாததை கண்டித்து தீப்பந்தங்களுடன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஊா்வலம்

SCROLL FOR NEXT