மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹார்திக் பாண்டியா தான் அங்கம் வகித்த அணியான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்தார். கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணியை பாண்டியா கேப்டனாக வழிநடத்தி வந்தார். அவர் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவதாக எடுத்த முடிவுக்கு மதிப்பளித்து அவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் முறையில் விற்றது குஜராத் டைட்டன்ஸ்.
இதையும் படிக்க: நம்பர் 7 ஜெர்சிக்கு ஓய்வளித்து எம்.எஸ்.தோனியை கௌரவித்த பிசிசிஐ!
குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மாறுவாரா அல்லது ஒரு வீரராக தொடர்வாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அந்த கேள்விக்கான விடையை இன்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மும்பை அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியாவை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: புதிய தொடக்கத்திற்கு எங்களது வாழ்த்துகள் எனக் கூறப்பட்டுள்ளது.