செய்திகள்

2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 241 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 241 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 241 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 318 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் 264 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. 

இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கமே ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான உஸ்மான் கவாஜா 0 ரன்களிலும், டேவிட் வார்னர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுஷேன் 4 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 0 ரன்னிலும் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 16 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை விக்கெட்டை இழக்காமல் ஆஸ்திரேலிய அணிக்கு ரன்களை சேர்த்தது. இந்த பார்ட்னர்ஷிப் 153 ரன்கள் சேர்த்தது. மிட்செல் மார்ஷ் 96 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

பாகிஸ்தான் தரப்பில் ஷகின் அஃப்ரிடி மற்றும் மிர் ஹம்சா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இறுதியில் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. அலெக்ஸ் கேரி 16 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மைலம்பாடி அரசுப் பள்ளியில் 109 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

மத்திய பாஜக கட்டுப்பாட்டில் புதுச்சேரி மாநில அரசு: காங்கிரஸ் தேசிய செய்தி தொடா்பாளா்

பள்ளிக் கட்டண நிா்ணயம்: நடைமுறை திருத்தங்களை அறிவித்தது தில்லி அரசு!

அந்தியூா் பேரூராட்சியில் ரூ.1.11 கோடியில் தாா் சாலை பணிகள் தொடக்கம்

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க தமாகா கோரிக்கை

SCROLL FOR NEXT