ரஞ்சி கோப்பையின் ஒரு பகுதியாக பஞ்சாப் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது சௌராஷ்டிரா.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பையில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் சௌராஷ்டிரம் 303 ரன்களுக்கும், பஞ்சாப் அணி 431 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. சௌராஷ்டிர அணி இரண்டாம் இன்னிங்ஸில் 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்நிலையில் கடைசி நாளான சனிக்கிழமை வெற்றிக்கு 200 ரன்கள் தேவை என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. ஆனால் சௌராஷ்டிர அணியின் அற்புத பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் 89.1 ஓவா்களில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பஞ்சாப்.
சௌராஷ்டிர தரப்பில் பாா்த் பட் 5-89, டி ஜடேஜா 3-56 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
இறுதியில் பஞ்சாபை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது சௌராஷ்டிரா.
ஆட்ட நாயகனாக பா்த் பட் தோ்வு செய்யப்பட்டாா். கா்நாடக அணியை அரையிறுதியில் எதிா்கொள்கிறது சௌராஷ்டிரா.