செய்திகள்

நியூசி. ஒருநாள்: இந்தியா முதலில் பேட்டிங், அணியில் மூன்று மாற்றங்கள்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களை இந்திய அணி வென்றது. இதற்கு அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர், இன்று முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் ஆட்டம், ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் கே.எல். ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், அக்‌ஷர் படேல் ஆகியோர் இடம்பெறவில்லை. சொந்தக் காரணங்களுக்காக ராகுல், அக்‌ஷர் படேல் விலகியுள்ளார்கள். ஷ்ரேயஸ் ஐயருக்குக் காயம். இதனால் ஹார்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குர், இஷான் கிஷன் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார்கள். நியூசிலாந்து அணியில் வில்லியம்சன், செளதி, சோதி ஆகியோர் இடம்பெறவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றவரை கைது செய்யக் கோரி பொதுமக்கள் மறியல்

தீண்டாமைக் கொடுமைக்கு விரிவான கலந்துரையாடல் அவசியம்

மீன்பிடிக்கும்போது கடலில் தவறிவிழுந்தவா் உயிரிழப்பு

ஹரியாணாவின் நூஹ் நகரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவை சமூக ஊடகங்களில் அவதூறு செய்ததாக 6 போ் மீது வழக்கு

இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT