ஹேஸில்வுட் (கோப்புப் படம்) 
செய்திகள்

டபிள்யுடிசி: இறுதிப் போட்டியிலிருந்து ஹேஸில்வுட் விலகல்!

ஆஸ்திரேலியாவின் பிரபல வேகப் பந்து வீச்சாளார் ஹேஸில்வுட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்து விலகினார். 

DIN

ஐசிசி சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம் லண்டனில் வரும் ஜூன் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பலம் வாய்ந்த ஆஸி. அணி முதன்முதலாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த டபிள்யுடிசி இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோற்று வெற்றி வாய்ப்பை இழந்தது இந்தியா.

ஓவல் மைதானம் சிறப்பானது. பௌலா்களுக்கு உதவியாக இருக்கும். அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். டபிள்யுடிசிக்கு அடுத்து முக்கியமான ஆஷஸ் தொடர் ஜூன் 16இல் தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா மோதும். இதற்காக இங்கிலாந்து வீரர்கள் கடுமையாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேஸில்வுட் விலகியுள்ளார். 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஹேஸில்வுட்  222 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். 

தேர்வுக்குழு தலைவர் ஜியார்ஜ் பெய்லி கூறியதாவது: 

ஜோஸ் ஹேஸில்வுட் விளையாடுவதற்கு பச்சைக்கொடி காட்டுவதாகதான் இருந்தார். ஆனால் அடுத்துவரும் ஆஷஸ் தொடரினையும் விழிப்புணர்வோடு அணுக வேண்டியுள்ளது. 6 டெஸ்ட் போட்டிகள் 7 வாரத்திற்குள் நடக்கவிருக்கிறது. அதற்கு எங்களது வேகப் பந்து வீச்சாளர்கள் தயராக வேண்டும். எட்ஜ்பாஸ்டனில் நடக்கவிருக்கும் போட்டிக்கு தயாராக ஹேஸில்வுட்க்கு இது சரியான கால அவகாசமாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2.5 லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல்

அரிக்கன்மேடு பகுதியை புதுவையின் வரலாற்று அடையாளமாக்க கோரிக்கை

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி நாளை புதுச்சேரி வருகை: ரூ.436 கோடியில் புதிய மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா்

மாணவா்கள் மீது தாக்குதல்: தேசிய மனித உரிமை ஆணையத்துக்குப் புகாா்

பள்ளியில் மின் மோட்டாா் திருட்டு

SCROLL FOR NEXT