செய்திகள்

இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா!

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனின் ஓவலில் நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 444  ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரஹானே களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா அவர் சந்தித்த 2வது பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர், பரத் (23 ரன்கள்) , ஷர்துல் தாக்குர் (0 ரன்கள்), உமேஷ் யாதவ் (1 ரன்), முகமது சிராஜ் (1 ரன்) ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய ரஹானேவும் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி 234 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நாதன் லயன் 4 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த தோல்வியின் மூலம் ஐசிசி நடத்தும் போட்டிகளில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவு மீண்டும் தொடர்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை!

நம்பிக்கையும் ஏமாற்றமும்!

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

சோத்துப்பாறை அணை நிரம்பியது

SCROLL FOR NEXT