டபிள்யுபிஎல்: முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி அணி!
டபிள்யுபிஎல் போட்டியில் முதன்முறையாக வென்றுள்ளது ஆர்சிபி அணி.
செய்திகள்டபிள்யுபிஎல்: முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி அணி!
டபிள்யுபிஎல் போட்டியில் முதன்முறையாக வென்றுள்ளது ஆர்சிபி அணி.
அலீசா ஹேலி தலைமையிலான யு.பி. வாரியர்ஸ் அணி அணியும் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.
யு.பி. அணி 19.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 46 ரன்களும், கிரண் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் தலா 22 ரன்களும் எடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களையே எடுத்தனர்.
மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
136 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய ஆர்சிபி அணி ஆரம்பித்திலேயே விக்கெட் இழந்து தடுமாறியது. அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா டக் அவுட் ஆனார். பின்னர் வந்த எல்லிஸ் பெரி 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்த ஜோடி நிதானமாக ஆடியது.
ஹீதர் நைட்- கனிகா அஹுஜா ஜோடி சிறப்பாக விளையாடினர். பின்னர் வந்த ரிச்சா கோஷ் வெற்றிக்கு உதவினார். கனிகா அஹுஜா 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அசத்தினார். ரிச்சா கோஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 31 ரன்களும் ஹீதர் நைட் 24 ரன்களும் எடுத்தனர்.
18 ஓவரில் 136 ரன்கள் எடுத்து தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ஆர்சிபி அணி. 6 போட்டிகளில் இதுதான் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
கனிகா அஹுஜா பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது பெற்றார்.