முகப்பு
செய்திகள்

தில்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டன் தேர்வு

ஐபிஎல் 2023 போட்டிக்கான புதிய கேப்டனை அறிவித்துள்ளது தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

ஐபிஎல் 2023 போட்டிக்கான புதிய கேப்டனை அறிவித்துள்ளது தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம். மேலும் அணியின் இயக்குநராக பிசிசிஐயின் முன்னாள் தலைவரான செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

கார் விபத்தில் காயமடைந்ததால் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பந்தால் ஐபிஎல் 2023 போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய கேப்டனைத் தேர்வு செய்யும் நிலைமை தில்லி கேபிடல்ஸ் அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தில்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆஸி. பேட்டர் டேவிட் வார்னர் தேர்வாகியுள்ளார். கடந்த வருடம் துணை கேப்டனாக இருந்த அக்‌ஷர் படேலுக்கு இந்த வருடமும் அதே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 2016-ல் சன்ரைசர்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையில் ஐபிஎல் கோப்பையை வென்றது. கடந்த வருட ஐபிஎல் போட்டியில் 5 அரை சதங்களுடன் 432 ரன்கள் எடுத்தார் வார்னர். 

மேலும், தில்லி கேபிடல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக பிசிசிஐயின் முன்னாள் தலைவரான செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →