முகப்பு
செய்திகள்

லக்னௌக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த கொல்கத்தா!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் லக்னௌ மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:59 PM
பகிர்:

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் லக்னௌ மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, லக்னௌ முதலில் பேட் செய்கிறது.

புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் லக்னௌ இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பிலும், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும் முனைப்பிலும் களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.