அதிதி அசோக் 
செய்திகள்

கோல்ஃப் போட்டியில் வெள்ளி வென்றார் அதிதி அசோக்!

ஆசிய விளையாட்டில் கோல்ஃப் போட்டியில் தனி நபர் பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

DIN

ஆசிய விளையாட்டில் கோல்ஃப் போட்டியில் தனி நபர் பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

இதன்மூலம் கோல்ஃப் விளையாட்டில் இந்திய மகளிர் முதல் முறையாக ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர். 

சீனாவின் ஹாங்ஷெள நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இதில், இன்று நடைபெற்ற கோல்ஃப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் களம் கண்டார். 7 ஸ்ட்ரோக் முன்னிலையில் இந்த நாளைத் தொடங்கினார். எனினும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அர்பிசயா யூபோல் தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். இதன்மூலம் அதிதி அசோக் வெள்ளிப்பதக்கம் வென்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

திராவிட இயக்கம் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

SCROLL FOR NEXT