ஆசிய விளையாட்டு உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
சீனாவில் செப். 23 ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அக். 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
10வது நாளான இன்று உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் கலந்துகொண்டார். அவர் 7666 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இதன்மூலம் வெள்ளிப்பதக்கத்தை அவர் தட்டிச்சென்றார். சீன வீரர் முதலிடம் பிடித்தார்.
உயரம் தாண்டுதலில் பாரதிந்தேர் சிங் படைத்த சாதனையை முறியடித்து புதிய சாதனையை தேஜஸ்வின் படைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.