விராட் கோலி 
செய்திகள்

தொந்தரவு செய்யாதீர்கள்: விராட் கோலி வேண்டுகோள்

உலகக் கோப்பை டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

DIN

உலகக் கோப்பை டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

உலகக் கோப்பை ஒரு நாள் தொடர் இந்தியாவில் நாளைமுதல் தொடங்கவுள்ளது. குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

சென்னையில் அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், இந்திய வீரர் விராட் கோலி வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், “உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகளை கேட்டு தயவுசெய்து என்னை நண்பர்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டில் இருந்தே கண்டுகளியுங்கள்.” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பகிர்ந்து, “உங்களின் குறுஞ்செய்திக்கு பதில் வரவில்லை என்றால் என்னிடம் உதவி கேட்காதீர்கள்” என்று விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிளஸ் 2 பெயா் பட்டியல்: நவ.7 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்!

ஃபிடே செஸ் உலகக் கோப்பை: பிரணவ், பிரானேஷ், கங்குலி வெற்றி!

அக்டோபரில் மெட்ரோவில் 93 லட்சம் போ் பயணம்!

பறிமுதல் செய்யப்பட்ட 1,023 கிலோ கஞ்சா அழிப்பு

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை புதிய சாம்பியன் யாா்? இந்தியா-தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

SCROLL FOR NEXT