முகப்பு
செய்திகள்

சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி-நவீன் உல் ஹக்!

ஐபிஎல் போட்டிகளில் மோதிக்கொண்ட விராட் கோலியும் நவீன்-உல்-ஹக்கும் இந்த உலகக் கோப்பையில் சமரசத்தில் ஈடுபட்டது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:07 AM
பகிர்:

ஐபிஎல் போட்டியில் மே 1ஆம் தேதி நடந்த போட்டியின்போது விராட் கோலிக்கும் ஆப்கனை சேர்ந்த நவீன் உல் ஹக்கிற்கும் மோதல் ஏற்பட்டது. இந்த வார்த்தைப் போர் ஐபிஎல் முழுவதும் நீடித்து வந்தன. இதனால் உலகக் கோப்பையில் இவர்களது ஆட்டம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

விராட் கோலி பேட்டிங் ஆட களமிறங்கியதும் நவீன் உல் ஹக் பந்து வீச வந்தார். ஏதோ நடக்கப்போகிறதென ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், நடந்ததோ வேறு. நவீன் உல் ஹக்கை ரசிகர்கள் கிண்டல் செய்யும்போது கோலி அவ்வாறு செய்ய வேண்டாம் என ரசிகர்களை நோக்கி சைகை செய்தார். 

பின்னர் விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் இருவரும் கைகள் குழுக்கி ஒருவரை ஒருவர் சமாதனம் செய்துக்கொண்டனர். 

இது குறித்து நவீன் உல் ஹக், “விராட் கோலி சிறந்த வீரர். நாங்கள் கைகள் குழுக்கிக் கொண்டு இந்தப் பிர்சனையில் இருந்து முன்னகர்ந்து விட்டோம். மைதானத்துக்குள் நடந்தது அத்துடனே முடிந்து விட்டது. மைதானத்துக்கு வெளியே எதுவுமில்லை. விராட் கோலி ‘இதை முடித்துக்கொள்வோம்’ எனக் கூறினார். நானும் அதையே கூறினேன்” என நெகிழ்ச்சியாகப் பேசினார். 

முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →