செய்திகள்

மைதானத்தின் மேற்கூரையிலிருந்து தூக்கி வீசப்பட்ட விளம்பரப் பதாகைகள்!

பலத்தக் காற்று வீசியதால் லக்னௌ மைதானத்தின் மேற்கூரையிலிருந்து விளம்பரப் பதாகைகள் தூக்கி வீசப்பட்டு ரசிகர்கள் மீது விழுந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. 

DIN

பலத்தக் காற்று வீசியதால் லக்னௌ மைதானத்தின் மேற்கூரையிலிருந்து விளம்பரப் பதாகைகள் தூக்கி வீசப்பட்டு ரசிகர்கள் மீது விழுந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. 

உலகக் கோப்பையில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள்  விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 209  ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியின்போது இடையே மழை குறுக்கிட்டு ஆட்டம் நடைபெறுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

மழை நின்ற பிறகு பலத்தக் காற்று வீசியதால் மைதானத்தின் மேற்கூரையிலிருந்து விளம்பரப் பதாகைகள் ரசிகர்கள் அமர்ந்திருக்கும் இடத்தின் மீது விழுந்தன. இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. விளம்பரப் பலகைகள் விழுந்த இடங்களில் குறைந்த அளவில் ரசிகர்கள் அமர்ந்திருந்தனர். நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால், அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ரசிகர்கள் பாதுகாப்பாக அமரவும் அறிவுறுத்தப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT