செய்திகள்

டைமண்ட் லீக் போட்டி : வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா!

டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 

DIN

டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில், நடப்பு ஆண்டுக்கான ஜூரிச் டையமண்ட் லீக் 2023 போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

முதல் முயற்சியில் 80.79 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்தபோதும், அடுத்து 2 முறை தவறுதல் ஏற்பட்டது. 4-வது முயற்சியில் 85.22 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்த சோப்ரா, 5-வது முயற்சியில் 85.71 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்தார்.

0.15 மீட்டர் தூர வித்தியாசத்தில் முதலிடத்தை நீரஜ் சோப்ரா தவறவிட்டார். ஜாகுப் வால்டிச் 85.86 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்துது தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார். இதன்மூலம் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் ரூ. 9.03 கோடியில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் மா. மதிவேந்தன் வழங்கினாா்

தருமபுரியில் ரூ.21.69 கோடியில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

பிப். 13 - சேலத்தில் விஜய் பிரசாரம்!

பிப். 8 இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 581 போ் எழுதுகின்றனா்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து, பாசிப்பயறு கொள்முதல்

SCROLL FOR NEXT