செய்திகள்

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து!

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில்  நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

DIN

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில்  நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கோண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஆட்டத்தில் மழையினால் முடிவு கிடைக்கவில்லை. இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 26) நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்தது. அந்த அணி 34.3  ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சாக கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 76 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் மில்னே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். டிரெண்ட் போல்ட் மற்றும் கோல் மெக்காஞ்சி தலா 2 விக்கெட்டுகளையும், ஃபெர்க்யூசன் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 34.5 ஓவர்களில்  இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக வில் யங் 70 ரன்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 50 ரன்களும் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும், நசும் அகமது ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவுடன் தொடர்புடைய மியூல் கணக்கு மோசடி கும்பல் கைது!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்!

நிலச்சரிவால் இடிந்த வீடு! 3 பேர் உயிரிழப்பு! | Darjeeling | Landslide | Rain

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சிக்கிம், மேற்கு வங்கத்திற்கு உதவத் தயார்: அஸ்ஸாம் முதல்வர்!

குஜராத்: 80 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்ததில் 3 பேர் பலி

SCROLL FOR NEXT