டி20 உலகக் கோப்பை குறித்து அதிகம் யோசிக்கவில்லை: இஷான் கிஷன்
டி20 உலகக் கோப்பை குறித்து அதிகம் யோசிக்கவில்லை என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை குறித்து அதிகம் யோசிக்கவில்லை என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ள நிலையில், இஷான் கிஷன் இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவதென்பது எனது கைகளில் இல்லை. தற்போது ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தி வருகிறேன். டி20 உலகக் கோப்பைத் தொடர் குறித்து அதிகம் யோசிக்கவில்லை. அணியில் இடம்பெறாமலிருந்தபோது நான் பயிற்சி மேற்கொண்டு இருந்தேன். கிரிக்கெட்டில் நீங்கள் சிறிது காலம் ஓய்வு எடுத்தால், உங்களைப் பற்றிய பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்துவிடும். அணியில் இடம்பெறாதபோது வீரர்கள் அந்த இடைவெளியை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு நேர்மறையான மனநிலையுடன் இருக்க வேண்டும் என்றார்.
Advertisement
Advertisement
அண்மையில் பிசிசிஐ அறிவித்த மத்திய ஒப்பந்தத்தில் இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.