FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சச்சின் டெண்டுல்கரை சந்தித்த மனு பாக்கர்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் நேரில் சந்தித்துள்ளார்.

Updated On : 30 ஆகஸ்ட் 2024, 7:31 pm IST
பதக்கங்களுடன் சச்சின் டெண்டுல்கரை சந்தித்த மனு பாக்கர் - படம் | மனு பாக்கர் (எக்ஸ்)
பகிர்:

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் நேரில் சந்தித்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார் மனு பாக்கர். மேலும், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் நேரில் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement

Advertisement

இது தொடர்பாக மனு பாக்கர் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மிகச் சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அவரது பயணம் எனக்கும், என்னைப் போன்று இலக்கினை நோக்கி பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய உந்து சக்தியாக இருக்கிறது. மறக்க முடியாத நினைவுகளை கொடுத்தற்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

மனு பாக்கருக்கு பதிலளித்து சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டிருப்பதாவது: உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் சந்தித்தது உண்மையில் சிறப்பான தருணமாக இருந்தது. பெரிய இலக்குகளை நோக்கி பல கனவுகளுடன் முன்னேறும் இளம் பெண்களுக்கு உங்களது வெற்றிக் கதை உந்து சக்தியாக உள்ளது. இந்தியாவுக்காக நீங்கள் மேலும் பல்வேறு சாதனைகளைப் படைக்க வேண்டும். இந்தியா உங்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தும் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments