செய்திகள்

கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகும் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்!

இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச் விலகியுள்ளார்.

DIN

இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச் விலகியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான ஹைதராபாதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளரான ஜாக் லீச்சுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச் விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: அடுத்த 24 மணி நேரத்தில் அபு தாபியில் இருந்து இங்கிலாந்து செல்லும் விமானத்தில் ஜாக் லீச் நாடு திரும்புவார். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி ராஜ்கோட்டில் உள்ளது. இங்கிலாந்து மருத்துவக் குழு ஜாக் லீச்சின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜாக் லீச்சுக்குப் பதிலாக மாற்று வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை. இங்கிலாந்து அணி டாம் ஹார்ட்லி, ரிஹான் அகமது மற்றும் சோயிப் பஷீர் ஆகிய மூன்று பிரதான சுழற்பந்துவீச்சாளர்களுடன் மீதமுள்ள போட்டிகளில் களம் காண உள்ளது. நான்காவது சுழற்பந்துவீச்சாளர் தெரிவாக ஜோ ரூட் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸ் எனக்கூறி முதியவரிடம் மோதிரம், ரூ.3,000 பணம் திருட்டு

பொங்கலையொட்டி 30 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பெண்ணிடம் 6 பவுன் நகை திருட்டு

காஞ்சிபுரத்தில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

பிரதமரின் தமிழக வருகை எழுச்சியைத் தரும்: வானதி சீனிவாசன்

SCROLL FOR NEXT