ராஞ்சி ஆடுகளம் குறித்து பென் ஸ்டோக்ஸ் இப்படி கூறலாமா?
இந்தியாவுக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள ராஞ்சி ஆடுகளத்தை பென் ஸ்டோக்ஸ் விமர்சித்துள்ளார்.
ராஞ்சியில் உள்ள ஆடுகளத்தைப் போன்று இதற்கு முன்பு ஒரு ஆடுகளத்தை பார்த்ததே இல்லை என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி நாளை (பிப்ரவரி 23) முதல் ராஞ்சியில் தொடங்குகிறது.
இந்த நிலையில், ராஞ்சியில் உள்ள ஆடுகளத்தைப் போன்று இதற்கு முன்பு ஒரு ஆடுகளத்தை பார்த்ததே இல்லை என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த ஆடுகளம் பார்ப்பதற்கு சுவாரசியமானதாக இருக்கிறதல்லவா? இந்த ஆடுகளம் குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆடுகளம் தொடர்பாக அதிகமாகவும் என்னால் கூற முடியாது. இது போன்ற ஒரு ஆடுகளத்தை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. அதனால் போட்டியில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது என்றார்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.