செய்திகள்

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் தேர்வு செய்யப்பட்டால்... என்ன சொல்கிறார் ஜானி பேர்ஸ்டோ!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை இந்தியா தேர்வு செய்தால், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களின் பலத்தை பாதிக்கும் என இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை இந்தியா தேர்வு செய்தால், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களின் பலத்தை அது பாதிக்கும் என இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜனவரி 25 முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை இந்தியா தேர்வு செய்தால், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களின் பலத்தை பாதிக்கும் என இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியா வெவ்வேறு தன்மையுள்ள ஆடுகளங்களை தேர்ந்தெடுக்க முடியும். அந்த ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு உகந்தவையாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் அண்மைக் காலங்களில் மிகச் சிறப்பாக செயல்படுவதை பார்க்க முடிகிறது. எந்த ஆடுகளமானாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருக்கும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருந்தால், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களின் பலம் பாதிக்கப்படும். அவர்கள எவ்வளவு பலம் வாய்ந்தவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT