செய்திகள்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது அழுத்தத்தை கொடுக்கிறது: நிக்கோலஸ் பூரன்

DIN

மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாடுவது மிகவும் அழுத்தத்தைக் கொடுப்பதாக அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச லீக் டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (ஜனவரி 19)  முதல் தொடங்குகிறது. 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாடுவது மிகவும் அழுத்தத்தைக் கொடுப்பதாக அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது சிறப்பான அனுபவம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் டி20 கிரிக்கெட்டில் இருக்கிறார்கள். டி20 லீக் போட்டிகளில் சிறந்த அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி விளங்குகிறது. சவாலை ஏற்றுக் கொள்வது என்பதுதான் முக்கியமானது. ஒரு அணியாக எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவோம். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது எப்போதுமே ஒரு விதமான அழுத்தத்தை ஏற்படுத்தும். இருப்பினும், இது போன்ற அழுத்தமான சூழல் வீரர்கள் சவால்களை ஏற்று சிறப்பாக செயல்பட உதவுகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைகளின் அருகே..

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை!

விபத்தில் சிக்கிய பிரபல நடிகரின் குடும்பம்! ஒருவர் பலி!

SCROLL FOR NEXT