முதல் தர கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்து புஜாரா சாதனை!
முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் புஜாரா படைத்துள்ளார்.
முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் புஜாரா படைத்துள்ளார்.
ரஞ்சிப் போட்டியில் விதர்பா மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது புஜாரா இந்த சாதனையைப் படைத்தார். ரஞ்சிக் கோப்பையில் விதர்பா மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்கிடையில் நேற்று முன் தினம் (ஜனவரி 19) தொடங்கிய போட்டி இன்று நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் சௌராஷ்டிரா 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர்!
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் சௌராஷ்டிர அணிக்காக விளையாடிய புஜாரா முதல் இன்னிங்ஸில் 43 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 66 ரன்களும் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 66 ரன்கள் எடுத்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றையும் அவர் படைத்துள்ளார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.