முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரியின் சாதனையை முறியடித்துள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த தன்மய் அகர்வால். 28 வயதான இவர் ரஞ்சி கோப்பையில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் முதல் இன்னிங்ஸில் 615/4 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதில் ஹைதராபாத்தின் தொடக்க வீரர் தன்மய் அகர்வால் 181 பந்துகளில் 366 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 26 சிக்ஸர்கள், 34 பவுண்டரிகள் அடங்கும்.
அருணாச்சல பிரதேசம் 27 ஓவர்களில் 129/1 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
முதல்தர ஒருநாள் போட்டியில் அதிவேகமாக (147 பந்துகளில்) 300 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார் தன்மய் அகர்வால். இதற்கு முன்னதாக ரவி சாஸ்திரி 119 பந்துகளில் அதிவேகமாக 200 ரன்கள் அடித்துள்ளார். 39 வருடங்களாக இருந்த ரவி சாஸ்திர்யின் இந்த சாதனையை முறியடித்துள்ளார் தன்மய் அகர்வால்.