FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மிகச் சிறந்த பந்துவீச்சாளரை கிரிக்கெட் உலகம் இழந்துவிட்டது: யுவராஜ் சிங்

ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல் மூலம் மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரை உலக கிரிக்கெட் இழந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Updated On : 12 ஜூலை 2024, 9:28 pm IST
யுவராஜ் சிங் - படம் | யுவராஜ் சிங் (எக்ஸ்)
பகிர்:

ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல் மூலம் மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரை உலக கிரிக்கெட் இழந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது கடைசி போட்டியில் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 704 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பலரும் தங்களது பாராட்டுகளையும், எதிர்கால பயணத்துக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரை உலக கிரிக்கெட் இழந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: ஜேம்ஸ் ஆண்டர்சனைப் போன்ற வீரர்கள் தினமும் உருவாவதில்லை. ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு முடிவை அறிவித்துவிட்டதன் மூலம், உலக கிரிக்கெட் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரை இழந்துள்ளது. மிகவும் துல்லியமாக பந்தினை ஸ்விங் செய்யும் உங்களது திறமை எங்களது காலத்தில் உங்களை மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக மிளிரச் செய்தது.

கையில் பந்தினை வைத்துக் கொண்டு நீங்கள் முழுவீச்சில் பந்துவீச ஓடிவரும் காட்சிகளை அனைவரும் கண்டிப்பாக மிஸ் செய்வார்கள். வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்துக்கு நகர்ந்துள்ள உங்களுக்கு எல்லாம் சிறப்பாக அமைய வேண்டுமென விரும்புகிறேன். உங்களுடன் இணைந்து விளையாடிய தருணங்கள் மகிழ்ச்சியளிக்கக் கூடியவை. கிரிக்கெட் உலகம் உங்களை கண்டிப்பாக மிஸ் செய்யும் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments