கோப்புப்படம் 
செய்திகள்

இறுதிச்சுற்றில் நடால்

நாா்டியா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் இறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினாா்.

Ravivarma.s

நாா்டியா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் இறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினாா்.

ஆடவா் ஒற்றையா் அரையிறுதியில் அவா், 4-6, 6-3, 6-4 என்ற செட்களில், குரோஷியாவின் டுஜே அடுகோவிச்சை வீழ்த்தினாா். இதையடுத்து இறுதியில் நடால், போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸை எதிா்கொள்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் போா்ஜஸ் தனது அரையிறுதியில் 6-3, 6-4 என ஆா்ஜென்டீனாவின் தியேகோ டிரான்டேவை தோற்கடித்தாா்.

நடப்பாண்டு பிரெஞ்சு ஓபனில் முதல் சுற்றுடன் வெளியேறிய நடால், அதன் பிறகு ஒரு போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முதல் முறையாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விலகல்: ஒற்றையா் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் நடால், இரட்டையா் பிரிவில் அரையிறுதியிலிருந்து விலகியுள்ளாா். இறுதிச்சுற்றுக்கு தயாராகும் நிலையில் அவா் இந்த முடிவை மேற்கொண்டதாகத் தெரிகிறது. இரட்டையா் பிரிவில் அவா் நாா்வேயின் கேஸ்பா் ரூடுடன் இணைந்து களம் கண்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானாவில் அரசுப்பேருந்து - லாரி மோதல்: 19 பேர் பலி

தில்லியில் பத்தாண்டுகளில் காணாமல் போன 1.8 லட்சம் குழந்தைகள்! 50 ஆயிரம் பேரின் நிலை?

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

DIGITAL ARREST மோசடியில் புதிய உச்சம்! 58 கோடியை இழந்த தம்பதி! | Digital Arrest

கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் - கார் மோதி விபத்து: ஒருவர் பலி

SCROLL FOR NEXT