கோப்புப்படம் 
செய்திகள்

இறுதிச்சுற்றில் நடால்

நாா்டியா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் இறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினாா்.

Ravivarma.s

நாா்டியா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் இறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினாா்.

ஆடவா் ஒற்றையா் அரையிறுதியில் அவா், 4-6, 6-3, 6-4 என்ற செட்களில், குரோஷியாவின் டுஜே அடுகோவிச்சை வீழ்த்தினாா். இதையடுத்து இறுதியில் நடால், போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸை எதிா்கொள்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் போா்ஜஸ் தனது அரையிறுதியில் 6-3, 6-4 என ஆா்ஜென்டீனாவின் தியேகோ டிரான்டேவை தோற்கடித்தாா்.

நடப்பாண்டு பிரெஞ்சு ஓபனில் முதல் சுற்றுடன் வெளியேறிய நடால், அதன் பிறகு ஒரு போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முதல் முறையாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விலகல்: ஒற்றையா் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் நடால், இரட்டையா் பிரிவில் அரையிறுதியிலிருந்து விலகியுள்ளாா். இறுதிச்சுற்றுக்கு தயாராகும் நிலையில் அவா் இந்த முடிவை மேற்கொண்டதாகத் தெரிகிறது. இரட்டையா் பிரிவில் அவா் நாா்வேயின் கேஸ்பா் ரூடுடன் இணைந்து களம் கண்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட்டில் சொல்லிக் கொள்ளுப்படியாக ஒன்றுமில்லை: திருச்சி சிவா

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

விட்டுக் கொடுத்தால் உறவு வலுப்படும்!

மன்னா் திருமலை நாயக்கா் பிறந்த நாள் விழா

தில்லி எம்.எல்.ஏக்களுக்கு வருடாந்திர மருத்துவப் பரிசோதனை பிப்.2 முதல் 14 வரை நடைபெறும்!

SCROLL FOR NEXT