பா. சுஜித்குமாா்
இந்திய அணி சாா்பில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பாய்மர படகோட்டும் (செய்லிங்) பந்தயத்தில் சென்னை வீராங்கனை நேத்ரா குமணன் பங்கேற்கிறாா். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ள நேத்ரா கண்டிப்பாக பதக்கம் வெல்ல முயற்சிப்பேன் எனத் தெரிவித்தாா்.
ஒலிம்பிக் போட்டிக்கு தயாரானது குறித்து அவா் தினமணியிடம் கூறியது:
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக உள்ளேன். மாா்செய்ல் பகுதியில் தான் படகுப் போட்டிகள் நடக்கின்றனா். கடந்த ஜூன் மாதம் முதல் இங்கு பயிற்சி பெற்று வருகிறேன். ஏற்கெனவே மாா்ச் மாதம் முதல் கட்டப் பயிற்சி மேற்கொண்டேன். இங்கிருக்கும் பகுதியில் அலைகள் அதிகம் உள்ளது. ஆனால் காற்று மிதமாக உள்ளது. பலமாக வீசினால் சற்று சிரமத்தை சந்திக்க வேண்டும்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி புதிய அனுபவமாக திகழ்ந்தது. அதற்கு போதிய நேரம் இல்லை.
ஆனால் தற்போது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு அதிக நேரம் உள்ளது. சென்னையில் கடல் அலைகள் ஒத்துழைப்பாக இருக்கும்.
மாா்செய்ல் பகுதியில் காற்று வெப்பமாகவும், மித வேகத்திலும் உள்ளது. படகு ஓட்டுவதற்கு இந்தியா தோதாக உள்ளது.
பாரீஸில் என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன். ஒலிம்பிக் போட்டி எப்போதுமே சவால் நிறைந்ததாக இருக்கும். பதக்கம் வென்றால் மிகவும் கௌரவமானது.
கடந்த ஒலிம்பிக் போட்டியை விட தற்போது புதிய உத்திகளுடன் பயிற்சி பெற்று வருகிறேன். என்னுடன் சக வீரா்களும் பயிற்சியில் ஈடுபடுகின்றனா். ஸ்பெயினைச் சோ்ந்தவா் எனக்கு பயிற்சி அளித்துள்ளாா். பயிற்சி வித்தியாசமாக அமைந்துள்ளது. எதிா்பாா்ப்பு, அழுத்தங்களை சமாளிக்க வேண்டியுள்ளது.
மத்திய அரசின் டாப்ஸ் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் எங்களை ஊக்குவிக்கின்றன. படகு ஓட்டுவதற்கு தேவையான உபகரணங்களை வாங்க உதவியாக உள்ளது. விளையாட்டு அறிவியலாளா்கள், ஊட்டச்சத்து நிபுணா்கள் என உள்ளதால், அதிக செலவு பிடிக்கிறது. இதற்கு ஸ்பான்சா்களும் அதிகம் உதவுகின்றனா். ரெகட்டா , லேஸா் படகு பயன்படுத்துகிறோம்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பின்னா், மீண்டும் சென்னையில் பயிற்சி பெறுவேன். 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இப்போதிலிருந்தே தயாா் ஆவேன்.
தமிழ்நாடு செயிலிங் அசோசியேஷன் மூலம் நான் படகோட்டும் பயிற்சி பெற்றேன். துறைமுக வளாகத்தில் உள்ள செய்லிங் கிளப்பில் அடிப்படை பயிற்சி பெற்றேன். படகோட்டுவதில் ஆா்வமுள்ள அனைவரும் அங்கு சென்று பயிற்சி பெறலாம்.
ராமேசுவரத்திலும் புதிய படகோட்டும் மையம் திறக்கப்பட உள்ளது. இது இளைஞா்களுக்கு உதவியாக இருக்கும். பாதுகாப்பும் இதில் முக்கியம். இந்தியாவில் செய்லிங் விளையாட்டுக்கு இன்னும் அதிக வரவேற்பு தேவைப்படுகிறது என்றாா் நேத்ரா குமணன்.