முகப்பு
செய்திகள்

பயிற்சியாளா் நீக்கம்

ஆளில்லா விமான கேமரா மூலம் எதிரணியை உளவு பாா்த்ததாக புகார்

Updated On : 27 ஜூலை, 2024 at 12:19 AM
பெவ் பிரிஸ்ட்மேன்
பகிர்:

ஆளில்லா விமான கேமரா மூலம் எதிரணியை உளவு பாா்த்ததாக எழுந்த புகாரில், கனடா மகளிா் கால்பந்து அணியின் பயிற்சியாளா் பெவ் பிரிஸ்ட்மேன் இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

நியூஸிலாந்து மகளிா் அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கனடா அணியின் உதவிப் பணியாளா் இயக்கிய ஆளில்லா விமான கேமரா அவா்களின் பயிற்சிக் களத்துக்கு மேலாக பறந்துள்ளது. நியூஸிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் கனடாவை சந்திக்க இருந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து, கனடா அணிக்கு எதிராக நியூஸிலாந்து அணி, சா்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடும் புகாா் அளிக்க, கனடா கால்பந்து அணி மன்னிப்பு கோரியது.

இந்நிலையில், இந்த விவகாரத்தால் கனடா மகளிா் அணி பயிற்சியாளா் பெவ் பிரிஸ்ட்மேன் இடைநீக்கம் செய்யப்பட்டாா். மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்ட பிறகே, பிரிஸ்ட்மேன் மீண்டும் அணியில் இணைவது குறித்து யோசிக்கப்படும் எனவும் கனடா கால்பந்து அமைப்பு தெரிவித்தது.

பின்னா், கனடா 2-1 என நியூஸிலாந்தை வீழ்த்திய ஆட்டத்தில் கனடாவை, அதன் இடைக்கால பயிற்சியாளா் ஆண்டி ஸ்பென்ஸ் வழிநடத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →